ஊத்தங்கரையில் கணித மேதை பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஊத்தங்கரை அதியமான் பள்ளியில் கணித மேதை ராமானுஜர் 137 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-22 15:29 GMT

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் கணித மேதை ராமானுஜர் 137 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கணித மேதை ராமானுஜர் 137 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் தலைமையில் நடைபெற்றது.அதியமான் கல்வி அறக்கட்டளை தலைவர் மல்லிகா சீனிவாசன், செயலர் ஷோபா திருமால் முருகன், மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைமணி சரவணகுமார் ,நிர்வாக அலுவலர் கணபதிராமன் ,துணை முதல்வர் அபிநயா கணபதிராமன், பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் முன்னிலையில் ராமானுஜரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

.மாணவ மாணவிகளின் கணித கண்காட்சி இரு பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.சிறந்த கணித படைப்பிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.கணித கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News