ராசிபுரத்தில் மே தினம் கொண்டாட்டம்

ராசிபுரத்தில் தூய்மை பணியாளர்கள் இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினம் கொண்டாடினர்.

Update: 2024-05-01 10:24 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருடம் தோறும் மே 1. ஒன்று அன்று உழைப்பாளர் தினத்தை தொடர்ந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தேர்தல் விதிமுறையின் காரணமாக தற்போது இந்த உழைப்பாளர் தினம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி உழைப்பாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நான்காம் ஆண்டாக ராசிபுரம் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் ராசிபுரம் நகராட்சியில் ஆதித்தமிழர் பேரவையுடன் பெருமாள், மணிமாறன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மே தினத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து இணைப்புகள் வழங்கி உற்சாகமாக உழைப்பாளர் தினத்தை கொண்டாடினர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23 வது வார்டு கவுன்சிலர் செல்வம் (எ) நாகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆதித்தமிழர் பேரவையில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் ஆதித்தமிழர் பேரவை ராசிபுரம் நகர தலைவர் ரவி. துணைத் தலைவர் மாரியப்பன். ராசிபுரம் நகரச் செயலாளர் சீனிவாசன். நகர அமைப்பு செயலாளர் ஆனந்தன். மற்றும் தூய்மை பணியாளர்கள் , ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News