உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்

உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-02 02:05 GMT
உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ,காந்தி கிராமம், டபுள் டேங்க் அருகே உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம், கரூர் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் முருகன், மாநில துணை பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட தலைவர் தர்மராஜ், சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் அழகையன், வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் சக்தி படையாட்சி, சமூக நீதிக் கூட்டமைப்பை சேர்ந்த ராயனூர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மே தின உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Tags:    

Similar News