மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-04 07:40 GMT
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பள்ளி மாணவியர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News