வருவாய் கோட்டாட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ உடன் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Update: 2024-02-16 11:22 GMT
மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு (இடது ஓரம் நிற்பவர்கள்) வட்டாட்சியர் சுகுமார், ஆர்டிஓ ஜெயஸ்ரீ

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீயை, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக அண்மையில் ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். அவரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.சந்திர பிரகாஷ், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா, மதுக்கூர் ஒன்றிய தலைவர் எம். பாலசுப்பிரமணியன், மதுக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர், "மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்.

மூன்று சக்கர ஸ்கூட்டர் மானியத்தில் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்" என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.  அப்போது பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார் உடனிருந்தார்.

Tags:    

Similar News