திராவிடர் கழகம் சார்பில் கூட்டம்: எம்எல்ஏவுடன் ஆலோசனை

பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற உள்ள கூட்டம் குறித்து எம்எல்ஏவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Update: 2024-04-29 11:54 GMT

எம்எல்ஏ உடன் ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மே மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடியரசு நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் நடைபெற உள்ளது,

மேலும் கூட்டத்தில்திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக சொற்பொழிவாளர் இளங்கோவன் மற்றும் சிந்தனைச் செல்வன் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இதனை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யும் பணிகளில் மாவட்ட செயலாளர் தங்கராசு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்,

இதில் நேற்று பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முகாம் அலுவலகத்தில், திராவிடர் கழகத்தின் பரப்புரை கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர், இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கராசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News