தூய்மை பணியாளருக்கு நிதி உதவி வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் விபத்துக்குள்ளான தூய்மை பணியாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் நிதி உதவி வழங்கினர்.

Update: 2024-03-07 15:36 GMT

தூய்மை பணியாளருக்கு நிதி உதவி வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் வசந்தி என்ற தூய்மை பணியாளர் மீது கடந்த வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி தனது இரண்டு கால்களும் முற்றிலும் சேதம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரை இன்று (மார்ச் 7) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட துணை தலைவர் பர்கிட் யாசின் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினர்.

Tags:    

Similar News