மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம் !
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம் - காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 11:16 GMT
காவல் நிலையம்
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தினேஷ் பாபு வயது 30. கடந்த சில வருடங்களாகவே தினேஷ் பாபுவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி வீட்டில் இருந்த தினேஷ் பாபு திடீரென மாயமானார். தினேஷ் பாபு வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து தினேஷ் பாபுவின் தந்தை நாகராஜ், தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான தினேஷ் பாபுவை தேடி வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.