மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை

ஆர்காடு சுந்தரம் தெருவை சேர்ந்த மனநலம் பாதித்த நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-27 10:38 GMT

தற்கொலை 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுந்தரம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (49). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜ் தெருவில் உள்ள இவரது தங்கை வீட்டில் உணவு சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த தங்கை இந்துமதி,சரவணன் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News