இருசக்கர வாகனத்தில் மினி பஸ் மோதி இருவர் பலி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் மீது அப்பகுதியில் வந்த மினி பஸ் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
Update: 2024-01-31 09:24 GMT
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் மீது அப்பகுதியில் வந்த மினி பஸ் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து விக்ரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இரவில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.