காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-08 16:00 GMT
ஜமாத் நிர்வாகிகள், தேவாலய நிர்வாகிகள், பெண்கள், பொது மக்களை சந்தித்து அமைச்சர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

 அருப்புக்கோட்டையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பல்வேறு சங்க நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகள், சமுதாய தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.‌

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக அருப்புக்கோட்டையில் நெசவாளர் காலனி, அன்பு நகர், சத்தியவாணி முத்து நகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து சி எஸ் ஐ இம்மானுவேல் தேவாலய நிர்வாகிகளை சந்தித்து சிறுபான்மையின மக்கள் அனைவரும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமையவும், தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறவும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெறவும் ஜெபம் செய்தனர்.‌

அதனைத் தொடர்ந்து பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்‌ ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News