அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

மாத்தார் பகுதியில் 14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

Update: 2024-03-15 11:08 GMT

மாத்தார் பகுதியில் 14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்


கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தார் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.

இதனை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். கெப்சிபாய் றூஸ் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் றூஸ், ஊராட்சி செயலர் ராஜன் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News