உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் ஆய்வு

ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-14 10:28 GMT

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டியில் வியாழக்கிழமை மதியம் 3 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மனுவாக அளிக்கும்பட்சத்தில், அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு, நிதி ஒதுக்கீடு பெற்று வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றப்படும்.என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News