குமளங்குளம்: அமைச்சருக்கு கும்ப மரியாதை

கடலூர் மாவட்டம், குமளங்குளம் பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

Update: 2024-01-25 16:18 GMT

அமைச்சருக்கு மரியாதை

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட வாண்டராசன்குப்பம் , வன்னியர்புரம் கிராமங்களில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News