சாலைப் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர் !

புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணியினை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-15 07:17 GMT

அமைச்சர் எஸ்.ரகுபதி 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் ஆயிங்குடி முதல் உமையாள்புரம் வரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News