தியாகதுருவம் பஸ் நிலையத்தில் மாஜி அமைச்சர் பேச்சு

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, தியாகதுருகம் பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு.

Update: 2024-04-08 09:15 GMT

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்

தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிய தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் பேசினார். கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, தியாகதுருகம் பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளனர். அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் என்று ஏமாற்றினர். இதனால் தி.மு.க., ஆட்சியின் மீது பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர்' என்றார்
Tags:    

Similar News