14 கிலோ மீட்டர் தூரம் நடந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் நடந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-02-29 05:39 GMT
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே நடைபயிற்சி மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருந்து பிரதான சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை வரை சுமார் 14 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Tags:    

Similar News