காணாமல் போன விவசாயி உடல் கிணற்றில் மீட்பு

காணாமல் போன விவசாயி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரணை.

Update: 2024-02-26 04:53 GMT

 விவசாயி உடல் கிணற்றில் மீட்பு

தியாகதுருகம் அடுத்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, 53; விவசாயி. இவர், கடந்த 23ம் தேதி சூளாங்குறிச்சியில் உள்ள வங்கிக்கு செல்வதாக தனது தம்பி தேவராஜியிடம் மொபைல் போனில் கூறிவிட்டு சென்றார். வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவரது விவசாய கிணற்றில் தண்டபாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது மகன் தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து தண்டபாணி இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News