அரசு நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
அரங்கோட்டை கிராமத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
Update: 2024-02-06 06:29 GMT
அரங்கோட்டை கிராமத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம் அரங்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டிருந்தது. இதனையொட்டி தா.பழூர் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் இன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதில் அரசுதுறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.