பள்ளி கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைப்பு

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அரசு பள்ளி கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-03-06 09:23 GMT
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் கழிப்பறை வசதி இல்லாத அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்ற எனது தொடர் முயற்சியின் கோரிக்கையை ஏற்று L&T நிறுவனம் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147, ஆலப்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி, வார்டு-151, பூத்தப்பேடு சென்னை மாநகராட்சி நடு நிலைப் பள்ளி, வார்டு-150, செட்டியார் அகரம், சென்னை மாநகராட்சி நடு நிலைப் பள்ளி, வார்டு-144, மதுரவாயல் அரசு மேல் நிலைப் பள்ளி, வானகரம் ஊராட்சி, மேட்டுக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கு ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை இன்று மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி மாதவன், ச.சங்கர்கணேஷ்., வட்ட கழக செயலாளர்கள் மாதவன், அ.மோசஸ், மாவட்ட பிரதிநிதிகள் க.பிருந்தாவனம், குப்புசாமி, விஜயன், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News