பழுதடைந்த நியாய விலை கடையை ஆய்வு செய்த எம்எல்ஏ

ரெட்டி அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இயங்கும் சவுளுப்பட்டி நியாய விலைக் கடையை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-28 03:28 GMT

தருமபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி S.508 ரெட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இயங்கும் சவுளுப்பட்டி நியாய விலைக் கடையை கிராம ஊர் பொது மக்கள் பழைய நியாயவிலைக் கடை பழுதடைந்து உள்ளதாகவும் எந்த நேரத்திலும் விழுந்து விடும் சூழலில் இருப்பதனால் அதனை இடித்து புதிய நியாயவிலைக்கடை அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் இன்று உடனடியாக நேரில் சென்று பழுதடைந்த நியாய விலைக் கடை கட்டிடத்தை ஆய்வு செய்து உடனடியாக புதிய கட்டிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பொதுமக்களிடம் கூறினார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஊர் கிராம மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News