மே தினம் : சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் வாழ்த்து

தொழிலாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் மே தின வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-01 03:05 GMT

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ,வு மான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, பொருளாதார தேக்க நிலையினால் தொழிற் சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனை வருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டு மென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது.

இதை நிறைவேற்றும் வகையில் கட்சி தேர் தல் அறிக்கையில் வாக் குறுதி வழங்கப்பட்டு இருக்கிறது.உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு,தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெரு மையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக் கும் வகையில், உரிமைக் குரல் எழுப்பும் நாளாக மே 1 அமைய வேண்டும்.தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டிய வர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News