பொது விநியோக நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

வளையல் காரன் புதூரில் பொது விநியோக நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-03-05 10:49 GMT
வளையல் காரன் புதூரில் பொது விநியோக நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள வளையல்காரன் புதூர் பகுதியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022 -23 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது விநியோக நியாய விலை கடை கட்டப்பட்டு, இன்று எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News