ஜெய கொண்ட சோழபுரம் அருகே பூங்கா அமைக்க எம்எல்ஏ ஆய்வு !

ஜெய கொண்ட சோழபுரத்தில் கோவில் குளம் அருகே பூங்கா அமைக்க எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-14 05:35 GMT
ஜெய கொண்ட சோழபுரத்தில் கோவில் குளம் அருகே பூங்கா அமைக்க எம்எல்ஏ ஆய்வு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆரணவள்ளி சமித ஆளவந்தீஸ்வரர் ஆலய குளம் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் அதனை பராமரித்து சீரமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் எடுத்த கோரிக்கையை ஏற்று இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கோவில் குளத்தை பார்வையிட்டார். மேலும் கோவில் குளத்தை சீரமைத்து அதன் அருகாமையில் பூங்கா ஒன்றை அமைக்கவும் ஆலோசித்து அது தொடர்பாக ஜெயங் கொண்ட சோழபுரம் பேரூராட்சி தலைவர் செளந்திர பிரியாவிடம் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News