அதிமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ ஓட்டு சேகரிப்பு !

க.மாமனந்தல் பள்ளிவாசலில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஓட்டுசேகரித்தார்.

Update: 2024-04-17 05:54 GMT

அ.தி.மு.க

க.மாமனந்தல் பள்ளிவாசலில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஓட்டுசேகரித்தார்.

கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் எம்.எல்.ஏ., செந்தில்குமார் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

க.மாமனந்தல் ஜாமியா வக்ப் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு ஓட்டு அளிக்கும்படியான பிரசார நோட்டீஸ்களை வழங்கி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் வேட்பாளர் குமரகுருவை வெற்றிபெற செய்தால், ஆற்று மாமனந்தல் ஆற்றின்மீது மேம்பாலம் உள்ளிட்ட தங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து தரப்படும் என வேட்பாளர் தரப்பில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் உறுதியளித்தார்.

இதில் அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உள்ளிட்ட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News