மே தின பேரணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ!

செங்கம் பகுதியில் நடைபெற்ற மே தின பேரணியை எம்.எல்.ஏ. மு.பெ.கிரி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-05-01 13:41 GMT

மே தின பேரணி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயிலில் தனியார் மின் தொழிலாளர்கள் நல சங்க நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை எம்.எல்.ஏ. மு.பெ.கிரி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா, முன்னாள் தலைவர் சென்னம்மாள் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News