பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நூதனப் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நூதனப் போராட்டம் நடத்தினர்.
Update: 2024-03-08 09:16 GMT
பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நூதனப் போராட்டம் நடத்தினர்.உலக மகளிர் தினத்தில் பெண்கள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி நூதன போராட்டம் நடந்தது .
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர் குழு சார்பில் திண்டுக்கல் வெள்ள விநாயகர் கோயில் சந்திப்பில் நடைபெற்றது. நகர தலைவர் சூர்யா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ,தலைவர் கே.ஆர்.பாலாஜிநகர செயலாளர் எம்.பிரேம்குமார், நகர துணை தலைவர் தர்மலிங்கம், நிர்வாகிகள் தாமு, பிரபு , சபரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.