உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-05 12:36 GMT
பணம் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள இலந்தன்குடிபட்டி பகுதியில் வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த துரைச்சாமி மகன் கண்ணன் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 59 ஆயிரத்து 700 ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள கருவுலகத்தில் வட்டாட்சியர் மைலாவதி ஒப்படைத்தார்