மாவட்ட அகில க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாதாந்திர கூட்டம்!

புதுக்கோட்டையில் மாவட்ட அகில க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-29 14:35 GMT

புதுக்கோட்டையில் மாவட்ட அகில க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்ட அகில க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாதாந்திர கூட்டம் இன்று 28-04-2024 கெளரிநிவாஸ் மண்டபத்தில் காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் செல்.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஷாஜஹான் அனைவரையும் வரவேற்றார். மற்றும் கம்பன், ராஜேஷ்குமார் பாஸ்கர், சர்வஜித் சரவணன், கணேசன், ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1, மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் பொதுமக்கள் மற்றும் ABGP உறுப்பினர்கள் அளித்த மனுக்கள் மீது தீர்வு காணப்படாத நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பது. முடிவில் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வை.முத்துராஜா அவர்களை ABGP மாவட்டத்தலைவர் செல்.கனகராஜ், மற்றும் சி.ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், ஷாஜஹான், கணேசன், ராஜேஸ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மேற்கண்ட மனுவினை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News