மூங்கில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா; சிறப்பு பஸ்கள் இயக்கம்

திண்டுக்கல் போக்குவரத்து கழகம் சார்பில் தேவதானப்பட்டி அருகேயுள்ள மூங்கில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-03-05 10:13 GMT

திண்டுக்கல் போக்குவரத்து கழகம் சார்பில் தேவதானப்பட்டி அருகேயுள்ள மூங்கில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  

தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்களை திண்டுக்கல் போக்குவரத்து கழகம் இயக்குகிறது. தேவதானப்பட்டியில் சுயம்புருவமாக உருவாகி பக்தர்களுக்கு அருள் பார்த்து வரும் மூங்கில் காமாட்சி அம்மன். இந்தக் கோயில் வேண்டிய வரம் வேண்டியவர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த கோவில் திருவிழா வரும் 8ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடக்கிறது. கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமாக அங்கு செல்வார்கள். பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிறப்பு பஸ்களை பயன்படுத்தி பொதுமக்கள் சென்று மூங்கில் காமாட்சி அம்மனை வழிபட்டு, அம்மனின் அருள் பெறுமாறு திண்டுக்கல் போக்குவரத்து கழகம் வேண்டிக் கொள்கிறது.

Tags:    

Similar News