தாய் மற்றும் மகள் மாயம் காவல்துறையினர் விசாரணை

கடத்தூர் அருகே தாய் மற்றும் மகள் காணாமல் போனதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-29 15:13 GMT

கடத்தூர் அருகே தாய் மற்றும் மகள் காணாமல் போனதை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் தேக்கல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி பொக்லைன் ஆப்ரேட்டர். இவருக்கும் பிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு வினோதினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா தனது மகள் வினோதினியுடன் ராமநாதபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். ஆனால் பெற்றோர் வீட்டுக்கு அவர்கள் செல்லவில்லை. இதையறிந்த பெரியசாமி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். அதன்பேரில் கடத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாயமான தாய் மற்றும் மகளை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News