மதுபாட்டில்களை கடத்திய தாய், மகன் கைது

கீரைப்பட்டியில் மதுபானங்களில் போதையை அதிகப்படுத்துவதற்காக மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து கடத்திய தாயையும், மகனையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-03 03:04 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரைப்பட்டியில், உதவி காவல் ஆய்வாளர் நந்தினி மற்றும் காவலர்கள் ரோந்து சென்ற போது, அந்த வழியாக டூவீலரில் வந்த 3 பேர் காவலர்களை பார்த்ததும் தப்பிக்க முயன்றனர். அவர்களை காவலர்கள் பிடிக்க முயன்ற போது, 2 பேர் காவலர்களின் பிடியில் சிக்கினர். விசாரணையில் கீரைப்பட்டியை சேர்ந்த மல்லிகா அவரது மகன் அரசு என்பதும், இருவரும் மதுபாட்டில்களை கடத்தி சென்றதும், அதில் அதிகளவில் போதை ஏற்றுவதற்காக ஊமத்தங்காய் சாற்றை கலந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்களையும், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய கோவிந்தராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News