தொழிலாளி கொலை வழக்கில் தாய், மகன் குற்றவாளி : நீதிமன்றம் தீா்ப்பு
தொழிலாளி கொலை வழக்கில் தாய், மகன் குற்றவாளி என தூத்துக்குடி நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
Update: 2024-02-10 06:42 GMT
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கீழத் தெருவை சோ்ந்த சிவலிங்கம் மகன் கண்ணன் என்ற ஜெயபாலன்(45). தொழிலாளி. இவா் கடந்த 2013 இல் முன்விரோதத்தால் அப்பகுதியைச் சோ்ந்தவா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த அழகுலிங்கம், அவரது மனைவி மல்லிகா, மகன் சுயம்புலிங்கம், ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அழகுலிங்கம் இறந்து விட்டாா். சிறுவன் தொடா்பான விசாரணை தனியாக நடந்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் வழக்கை விசாரித்து மல்லிகா, சுயம்புலிங்கம் ஆகிய 2 பேரையும் குற்றவாளி என்றும், தண்டனை விவரம் பிப்.12இல் அறிவிக்கப்படும் என்றும் நேற்று தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞா் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.