சாலையில் நிறுத்தப்படும் மணல் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர்-அரக்கோணம் சாலையில் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2024-05-26 13:41 GMT

திருவள்ளூர்-அரக்கோணம் சாலையில் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.


திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு வீரராகவபுரம் வியாசபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. இச்சாலையில் திருவாலங்காடுக்கு உட்பட்ட சர்க்கரை ஆலை தேரடி பவானி நகர் பகுதியில் ேஹாட்டல்கள் அருகே மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

குறுகலான இச்சாலையில் லாரிகள் சாலையிலே நிற்பதால் வாகனங்களில் சென்று வர முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இதனால் அவர்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து திருவாலங்காடு காவல் துறையிக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. திருவள்ளூர் எஸ்.பி., இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News