ரோடு மோசமானதால் வாகன ஓட்டிகள் அவதி

வேடசந்தூர் பகுதியில் ரோடு மோசமானதால் விபத்து உள்ளவதால் சாலை சீரமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-24 06:36 GMT

ரோடு மோசமானதால் வாகன ஓட்டிகள் அவதி 

திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்த வழியாக வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் ரோடு சேதமாகி,ஜல்லிகற்கள் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அவற்றில் வாகனங்களை விட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் பல வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தொடரும் விபத்துகளை தவிர்க்க சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி ரோடுகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News