ஆத்தூர் : சாலையில் ஆயில் ஊற்றியதால் வாகன ஓட்டிகள் அவதி !
ஆத்தூர் உடையார்பாளையத்தில் சரக்கு வேனில் இருந்து ஆயில் சாலையின் நடுவே ஊற்றியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. இதனால் தூய்மை பணியாளர்கள் சாலை நடுவே மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 08:29 GMT
ஆயில்
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற சரக்கு வேனில் ஆயில் ஏற்றி சென்றபோது எதிர்பாராத விதமாக சரக்கு வேனில் இருந்த ஆயில் சாலையின் நடுவே ஊற்றியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள் தகவல் அறிந்து வந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை நடுவே மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது