புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-02-29 13:32 GMT
செங்கல்பட்டு மாவட்டம்  சூனாம்பேடு கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.செய்யூர் தொகுதி விசிக கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு பாபு அவர்களிடம், சூனாம்பேடு பகுதி மக்கள் இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, திமுக ஒன்றிய கழக செயலாளர் சிற்றரசு, கூட்டமைப்பின் தலைவர் நிர்மல்குமார், விசிக கட்சி ஒன்றிய செயலாளர்கள் புகழேந்தி, தமிழ்விரும்பி, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், நிர்வாகிகள் அப்பு, வரதராஜ், பூலோகம், பாரதி காண்டீபன், சாந்தி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News