அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-02-26 06:59 GMT

எம்ஆர்கே பன்னீர்செல்வம் 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று 26. 2, 2024 திங்கட்கிழமை மாலை முதல் 27, 28 ஆகிய மூன்று நாட்களும் மாலை 4. 00 மணி முதல் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாகம் வாரியாக “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை இல்லந்தோறும் சென்று வழங்கி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News