கிணற்றை சுத்தம் செய்த பேரூராட்சி ஊழியர்கள்

ஆலங்குளம் அருகே கிணற்றை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2024-06-08 06:47 GMT
ஆலங்குளம் அருகே கிணற்றை சுத்தம் செய்த பேரூராட்சி ஊழியர்கள்

தென்காசி மாவட்டம் ,ஆலங்குளம் பகுதியில் உள்ள காவல் நிலையம் பின்புறம் உள்ள ஒரு கிணற்று நீரை நான்கு வது வார்டு பொதுமக்கள் நாள்தோறும் விநியோகம் செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த கிணற்றில் குப்பை,கூளங்கள் தேங்கி காட்சியளித்தன.

இதனை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ஆலங்குளம் பேரூராட்சி ஊழியர்கள் கிணற்றில் கடந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News