கணவர் கொலை - மனைவி மகனுக்கு ஆயுள் தண்டனை
தேவாரம் அருகே கணவரை கொலை செய்த மனைவி மகனுக்கு ஆயுள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 04:50 GMT
கணவர் கொலை - மனைவி மகனுக்கு ஆயுள் தண்டனை
தேவாரம் அருகே உள்ள சிந்தலை சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜேசுதாஸ் மகன் அந்தோணி ராஜா வயது 60 இவரது மனைவி செலின் மேரி வயது 57 மகன் ராஜ்குமார் வயது 36 மகள் விக்டோரியா வயது 34 இதில் அந்தோணி ராஜா அடிக்கடி மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி செல்லின் மேரியுடன் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி மது போதையில் வீட்டிற்கு சென்ற அந்தோனியார் ராஜா வழக்கம்போல செலின் மேரியுடன் தகராறு செய்து அவரை தாக்கினாராம் . இதனால் ஆத்திரம் அடைந்த செலின் மேரி ராஜ்குமார் இருவரும் கட்டை, கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிந்து செலின் மேரி ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செலின் மேரி ராஜ்குமார் ஆகியோரை குற்றவாளிகள் என தீர்மானித்து இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.