சுவாமிமலை கோவிலுக்கு பால்குடம் காவடி எடுத்து வந்த முருக பக்தர்கள் !!

முருக பக்தர்கள் அசூரிலிருந்து சுவாமிமலை கோவிலுக்கு பால்குடம் காவடி எடுத்து வந்தனர்.

Update: 2024-05-23 11:41 GMT
அசூரிலிருந்து சுவாமிமலை கோவிலுக்கு பால்குடம் காவடி எடுத்து வந்த முருக பக்தர்கள் கும்பகோணம் அருகே அசூர் ஸ்ரீ சுந்தரவல்லி மாரியம்மன் கோவிலில் இருந்து சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு 57ஆம் ஆண்டு பால்குடம் காவடி புறப்பாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு காவடி எடுத்தும் அசூரிலிருந்து சுவாமிமலைக்கு நடைபயணமாக சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். மேலும் சுவாமிமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News