போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கிய இஸ்லாமியர்கள் !

குமாரபாளையம் போலீசாருக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்கினர்.

Update: 2024-03-15 06:47 GMT

நோன்பு கஞ்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசாருக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்கினர். ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாகும். ஏப்.11ல் ரம்ஜான் பண்டிகை வரவுள்ளதால், இஸ்லாமியர்கள் தற்போது நோன்பிருந்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, அனைத்து சமூக மக்களுக்கும், நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். நேற்று குமாரபாளையம் போலீசாருக்கு, இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி வழங்கினர். இஸ்லாமியர்களுக்கு எஸ்.ஐ.க்கள் கங்காதரன், அன்பில்ராஜ், தங்கவடிவேல்,எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், எட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட மகளிர் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News