செய்யாறு அருகே அனக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் விழா

Update: 2023-12-04 07:44 GMT

முத்தமிழ் விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அடுத்த அணக்காவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடந்தது . நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முரளி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட முதுகலை ஆசிரியர் தமிழரசன், இசை ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழின் சிறப்புகள் குறித்து பேசினர். ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர் .முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
Tags:    

Similar News