பெருங்கட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்ற விழா

Update: 2023-12-04 07:46 GMT

முத்தமிழ் மன்ற விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முத்தமிழ் மன்றம் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி பேராசிரியர் முனைவர் கண்ணன் கலந்து கொண்டு கற்றலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முன்னதாக உதவி தலைமைஆசிரியர் கமலக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர்கள் சந்தானம், ஜெயமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
Tags:    

Similar News