கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள்

பி.வேளாங்குளத்தில் கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Update: 2023-12-22 16:10 GMT

 பி.வேளாங்குளத்தில் கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

பி.வேளாங்குளத்தில் வேலாயுத பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு - திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே பி.வேளாங்களத்தில் உள்ளது வேலாயுத பெருமாள் கோவில். இக்கோவிலின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத திருடர்கள் அங்கிருந்த 4 பித்தளை மணிகள், 1 பித்தளை விளக்கு, 2 குத்து விளக்கு, 5 தாம்பாலம் ஆகியவற்றை திருடி சென்றதாக அக்கோவிலின் பூசாரி செந்தில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News