நாகர்கோவில் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது 

வடசேரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-06 03:05 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெகபா என்பவர் தலைமையில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு  இருந்தனர். அப்போது வடசேரி மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் ஒருங்கினசேரி சோழராஜா கோயில் தெருவை சேர்ந்த சொர்ண ராஜா (61) என்பவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.       தொடர்ந்து  அவரை கைது செய்து அவரிடமிருந்து 20  கேரளா  லாட்டரிகளை பறிமுதல் செய்தனர். இதே போல் வடசேரி சந்தை தெற்கு வாசல் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த தூத்துக்குடி பகுதி சேர்ந்த மோகனசுதன் (24) என்பவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News