டேங்கை திறந்து வைத்த நாங்குநேரி எம்எல்ஏ !

2023-24 ஆம் ஆண்டு தொகுதி நிதி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீர் டேங்க் அமைக்க எம்எல்ஏ ரூபி மனோகரன் நிதி ஒதுக்கீடு செய்தார்.

Update: 2024-07-05 06:01 GMT

ரூபி மனோகரன்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2023-24 ஆம் ஆண்டு தொகுதி நிதி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீர் டேங்க் அமைக்க எம்எல்ஏ ரூபி மனோகரன் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பொட்டல்புரம், மீனாட்சிநாதபுரம், தட்டாங்குளம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்கை நேற்று (ஜூலை 2) எம்எல்ஏ ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News