நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை கட்டுவது, பழுது பார்ப்பது திட்டத்தில் உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தொடர்பு எண்களை நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2024-01-16 07:30 GMT

நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 

நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் முற்றிலுமாக சேதம் அடைந்த வீடுகளை புதிதாக கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களுடைய வீடுகள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகலாம் அல்லது 7305980629 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News