முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி

நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-04-11 08:17 GMT

நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிசட்டி,பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம்- மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது இதையொட்டி கடந்த மாதம் 31-ஆம் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் நிகழ்சியும் அன்றிரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5-ஆம் தேதி தோரணமரம் ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

7-ஆம் தேதியன்று இரவு அம்மன் குளத்திலிருந்து கரகம் பாவித்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கைகள் நடந்தது.ஈ பக்தர்கள் பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. புதன்கிழமை காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News