தேசிய சதுரங்கம் : தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன்

வேலூரில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக அணி 4 பிரிவுகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2023-12-31 07:44 GMT
தமிழக அணி

வேலூர் மாவட்டம்,அரியூரில் 67 ஆவது தேசிய அளவிலான பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதில் 14,17,19 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது . இதில் நாடு முழுவமிருந்து 32 மாநிலங்களை சேர்ந்த 900 மாணவ,மாணவிகள் இச்சதுரங்க போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள்.

ஐந்து நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் , 14 வயது ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும், பெண்கள் பிரிவில் சி.ஐ.எஸ்.எப் அணியும் , 17 வயது ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும், பெண்கள் பிரிவில் மகாராஷ்டிர மாநில அணியும், 19 வயது ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும், 19 வயது பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும் தங்கப்பதக்கங்களை வென்றனர். இதில் ஆண்கள் பிரிவில் 14,17,19 ஆகிய மூன்று வயது பிரிவுகளிலும் தமிழ்நாடு ஆண்கள் பிரிவும் , 19 வயது பிரிவில் தமிழ்நாடு பெண்கள் பிரிவும்,தங்கப்பதக்கம் வென்றதால் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது . போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பதக்கங்களையும் ரொக்கப்பரிசுகளையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News